ப்ரீத்தி ஜிந்தாவின் கனவை சிதைத்த மாஸ்டர் தோனி
ஐபிஎல் தொடரின் 53வது லீக் போட்டி இன்று அபுதாபியில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 153 ஓட்டங்களைக் குவித்தது. பஞ்சாப் சார்பாக தீபக் ஹூடா அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 62 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டூபிளசிஸும் கெயிக்வார்டும் களம் இறங்கினர். டூபிளசி 48 ரன்களில் அவுட்டாக கெயிக்வார்டுடன் ராயுடு கைக்கோர்த்தார்.
இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18.5 பந்துகளில் 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்தனர். கெயிக்வார்ட் 62 ரன்களுடனும், ராயுடு 30 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றனர். இந்தத் தோல்வியின் மூலம் பஞ்சாப் அணியின் ப்ளே ஆஃப் கனவு சிதைந்தது.

No comments: