அவமானம் தாங்காமல் 15வயது சிறுமி தீக்குளிப்பு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி அவமானம் தாங்காமல் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 வயதான குறித்த சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த 25 வயதான ரஞ்சித்குமார் என்பவர் காதலிப்பதாக கூறி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்றிரவு தோழி வீட்டுக்குச் சென்று வீட்டுக்கு வந்து கொண்டிருந்த சிறுமியை வழிமறித்த ரஞ்சித், தன் காதலை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என தகராறு செய்துள்ளான். அதற்கு சிறுமி மறுத்த நிலையில், அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளான்.
சிறுமியின் ஆடை கிழிந்ததால் இதனை அவமானமாக கருதிய சிறுமி, வீட்டுக்கு வந்து மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்துள்ளார். சிறுமி காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் கொடுத்த வாக்குமூலத்தின்படி ரஞ்சித்குமார் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
No comments: