தாயும் குழந்தையும் கிணற்றிலிருந்து மீட்பு!- வவுனியாவில் சோகம்!!
வவுனியா பறண்நட்டகல் பகுதி கிணறு ஒன்றிலிருந்து தாயினதும் அவரது மூன்று வயது குழந்தையினதும் சடலங்களை ஓமந்தை பொலிஸார் மீட்டுள்ளனர்
குறித்த இருவரும் நேற்று (27.12) அவர்களது வீட்டில் இருந்துள்ளனர். எனினும் இரவு 12 மணியவிளவில் காணாமல் போயிருந்த நிலையில் ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள் அவர்களை தேடியுள்ளனர்.
இந்நிலையில் இன்று (28) காலை வீட்டுக்கு அருகில் இருந்த வயல் கிணறு ஒன்றிலிருந்து அவர்கள் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் அதே பகுதியை சேர்ந்த 42 வயதான தாயும் அவரது மூன்று வயதான மகளுமே ஆவர்.
சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தாயும் குழந்தையும் கிணற்றிலிருந்து மீட்பு!- வவுனியாவில் சோகம்!!
Reviewed by Nila
on
18:58:00
Rating:

No comments: