கணவனின் மரணத்திற்கு நீதி கேட்டு கைக் குழந்தையுடன் அலையும் பெண்
ஊரடங்கு காலத்தில் மலேசியாவில் இருந்து சென்னை வந்து நட்சத்திர விடுதியில் தனிமைபடுத்தப்பட்டிருந்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
ந 6 மாதங்கள் கடந்தும் தனது கணவர் மரணத்திற்கான காரணம் தெரியாமல் கைக்குழந்தையுடன் அலுவலகம் அலுவலகமாக அலைந்து வருகிறார் அவரது மனைவி.
கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி சிறப்பு விமானம் மூலம் சென்னை திரும்பிய அவர் கொரோனா பரிசோதனைக்கு பிறகு, தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, தேனாம்பேட்டையிலுள்ள ஹயாத் நட்சத்திர விடுதியில் சொந்த செலவில் தனி அறை எடுத்து தங்கியிருந்துள்ளார்.
இரண்டு, மூன்று நாட்களாக சுந்தரவேலிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் ஏதும் வராததால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் நட்சத்திர ஹோட்டல் நிர்வாகத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.
2 நாட்களாக சுந்தரவேலை காணவில்லை என தெரிவித்த ஹோட்டல் ஊழியர்கள், பின்னர், 29-ந் தேதி அன்று சுந்தரவேல் கழிவறையில் சடலமாக கிடப்பதாக குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளனர். உடலை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது.
மேலும், மரணத்திற்கான காரணத்தை பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் தெரியவரும் என அதிகாரிகள் கூறவே, அதனை நம்பி குடும்பத்தினர் உடலை பெற்றுக்கொண்டு இறுதி சடங்குகளை செய்து முடித்துள்ளனர்.
அதன் பிறகு 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் பிரேத பரிசோதனை அறிக்கையும் வரவில்லை, சுந்தரவேலின் மரணத்திற்கான காரணமும் தெரியவில்லை. இதற்காக தான் கைக்குழந்தையுடன் அலையாத அரசு அலுவலகங்களே இல்லை என கண்ணீர் வடிக்கிறார் மனைவி சந்திரா.
No comments: