வாள்வெட்டில் படுகாயமடைந்த நபருக்கு நேர்ந்த சோகம்
அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை பகுதியில் 10 பேர் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி வீரமுனை பகுதியில் வீதியில் நின்ற நபர் ஒருவரை மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் அடங்கிய குழுவினர் வாள் மற்றும் ஆயுதங்களால் தாக்கி தப்பிச் சென்றனர்
இத் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
வீரமுனை பிரதான வீதியை சேர்ந்த 30 வயதுடைய அசோக் என்பவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். இத் தாக்குதலில் படுகாயமடைந்த வாள்வெட்டு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்கவின் கட்டளையின் படி, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி நௌபரின் வழிகாட்டலில், குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில், விசேட குழு நியமிக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments: