இரவில் வானத்தைப் பார்த்து ரசிப்பவர்களுக்கு இந்த வாரம் ஒரு சிறப்பு காட்சி ஒன்று காத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஏப்ரல் 25 ஆம் திகதி அதிகாலையில், சுக்கிரன், சனி மற்றும் சந்திரன் வானத்தில் நெருக்கமாகத் தோன்றும், இதனை வெறும் கண்களால் பார்க்கக்கூடியதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மிக நெருக்கமான இடத்தில், சுக்கிரனும் சந்திரனும் சுமார் நான்கு டிகிரி இடைவெளியில் காட்சியளிப்பதை காணலாம்.
சனியும் சந்திரனும் சுமார் இரண்டு டிகிரி இடைவெளியில் காட்சித்தருவதை பார்க்க முடியும்.
அவற்றைப் பார்க்க தொலைநோக்கி தேவையில்லை, ஆனால் தெளிவான வானம் மற்றும் குறைந்த ஒளி மாசுபாடு உள்ள இடத்தில் இருந்து பார்ப்பது நல்லது.
இலங்கையில், மக்கள் இந்த அரிய நிகழ்வை அதிகாலை 4:00 மணி முதல் பார்க்கலாம். மேலும் அது சூரிய உதயம் வரை தெரியும் என்று வானியலாளர்கள் கூறுகின்றனர்.