உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் வைரல் செய்திகள், இலங்கை, ஆஸ்திரேலியா,கனடா,இந்தியா, தமிழ்நாடு , தொழில்நுட்பம்,செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம்
மனைவியை மிரட்டுவதற்காக 8 மாத குழந்தைக்கு கணவன் செய்த கொடூர செயல்..!
நாடு முழுவதும் சமீப காலங்களாக வரதட்சணை கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், வரதட்சணைக் கேட்டு தன்னுடைய மனைவியை மிரட்டுவதற்காக,
தன்னுடைய 8 மாத குழந்தையை தலைகீழாக ரோட்டில் கணவன் தூக்கிச் சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், போலீசார் குழந்தையைத் தலைகீழாக தூக்கிச் சென்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சு. இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
இதற்கிடையில் தனது மனைவியிடம் வரதட்சணையாக பணம் மற்றும் கார் வேண்டும் என்று கேட்டு சஞ்சு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
சஞ்சுவின் குடும்பத்தினரும், சஞ்சுவின் மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், வரதட்சணை கேட்டு தனது மனைவியை மிரட்டுவதற்காக, பிறந்து 8 மாதங்களே ஆன தனது குழந்தையை தலைகீழாக பிடித்து தூக்கியபடி சஞ்சு ரோட்டில் நடந்து சென்றுள்ளார்.
இதனை பார்த்த ஊர்மக்கள் இது குறித்து கேட்டபோது, தனக்கு பணம் வேண்டும் என்றும், இதை வீடியோ எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் சஞ்சு கூறியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலான நிலையில், போலீசார் சஞ்சு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதே சமயம், சஞ்சுவின் குழந்தை தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், குழந்தையின் இடுப்பு எலும்பு இடம் பெயர்ந்துள்ளதாகவும் சஞ்சுவின் மனைவி தெரிவித்துள்ளார்.
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser. The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.