17 வயது சிறுமியின் சம்மதத்துடன் நடந்த திருமணம் மற்றும் உறவு தொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிறுமியின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, அவரது சம்மதத்துடன் நடந்த உறவை குற்றமாகக் கருத முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அவரது பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்தில் விருப்பமில்லாததால், அவர் தனது காதலனுடன் சென்று பஞ்சாபில் திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து, டெல்லி காவல்துறை புகார் பதிவு செய்து, சிறுமியின் காதலனை கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்தது.வழக்கு விசாரணையின்போது, சிறுமி நீதிமன்றத்தில் தனது காதலனை திருமணம் செய்து கொண்டதாகவும், இது தனது முழு சம்மதத்துடன் நடந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், ஹரியானா உயர் நீதிமன்றம் தங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டார்.டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி, இது இருவருக்கும் இடையேயான காதல் உறவின் அடிப்படையில் நடந்த திருமணம் எனவும், பாலியல் உறவு சம்மதத்துடன் நடந்தது தெளிவாகிறது எனவும் கூறினார்.
சிறுமி மைனர் என்பதால், POCSO சட்டத்தின்படி அவரது சம்மதம் சட்டப்படி செல்லாது என்றாலும், அவரது வாக்குமூலத்தை முற்றிலும் புறக்கணித்து குற்றம் சாட்டப்பட்டவரை சிறையில் அடைப்பது "விபரீதமான நீதியாக" இருக்கும் என நீதிபதி தெரிவித்தார்.
இந்த தீர்ப்பு, சம்மதத்துடன் நடக்கும் உறவுகள் தொடர்பான சட்ட விவாதங்களுக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது.