சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (பெயர் மாற்றப்பட்டது), தன் மகள் சுபாஷினிக்காகவே (17) தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். எட்டு ஆண்டுகளுக்கு முன் மனைவியை இழந்த பிறகு, மகளின் எதிர்காலத்தைக் கருதி மறுமணம் செய்யாமல், இரவு பகலாக உழைத்து வந்தார்.

ஆனால், மகளின் சமீபத்திய நடவடிக்கைகள் அவரை மனமுடைந்து போலீஸ் நிலையத்தில் வேதனையை வெளிப்படுத்த வைத்தன.சுபாஷினி, இன்ஸ்டாகிராமில் 30,000 பின்தொடர்பவர்களைக் கொண்டு, தனது நண்பர்களுடன் வீடியோக்கள் பதிவிட்டு பிரபலமாக இருந்தார்.
சமீபத்தில், ஆண்கள் போன்று உடையணிந்து, தோழியுடன் யூடியூப் பேட்டியில் தோன்றி வைரலானார். ஆனால், கார்த்திக்கால் மகளை முழுமையாக கவனிக்க முடியாததால், அவர் சென்னை பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
கடந்த மூன்று நாட்களாக சுபாஷினிக்கு சிறுநீரகத் தொற்று ஏற்பட்டு, காப்பக உரிமையாளர் கார்த்திகேயன் அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
ஆனால், ஜூலை 30 அன்று, சுபாஷினி தனது செல்போன் உள்ளிட்ட பொருட்களை மருத்துவமனையில் விட்டுவிட்டு தப்பிச் சென்றார். பதறிய கார்த்திகேயன், மருத்துவமனையின் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பெண் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினார். விசாரணையில், சுபாஷினி எண்ணூரில் உள்ள தனது இன்ஸ்டாகிராம் நண்பர் வீட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸார் அவரை மீட்டு, கார்த்திக்கை வரவழைத்தனர். மகளை காப்பகத்தில் சேர்க்காமல், உடன் வைத்து பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.காவல் நிலையத்தில், கார்த்திக் கண்ணீர் மல்க பேசினார்.
“மகளுக்கு நல்ல வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்பதற்காக மறுமணம் செய்யாமல் உழைத்தேன். ஆனால், என்னால் அவளை கவனிக்க முடியாததால் காப்பகத்தில் சேர்த்தேன்.
இப்போது இப்படி ஆகிவிட்டது,” என்று வேதனையுடன் கூறினார்.இச்சம்பவம், சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் பெற்றோர்-பிள்ளைகள் உறவில் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டுகிறது.

நிலைமை இப்படி இருக்க, Youtube மூலம் பிரபலமான இந்த சிறுமியின் வீடியோவின் கமெண்ட் செக்ஸனில், கஞ்சா குடிக்கி ஒருவனிடம் ஏமாந்து பிள்ளை பெற்றுக் கொண்டு தற்போது சிங்கிள் மதராக இந்த பெண் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த வயதில் இதெல்லாம் தேவையா..? என்று கமெண்ட் ஒன்று நெட்டிசன்களை அதிக வைத்திருக்கிறது.