சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம், இரு பெண்களின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட முரண்பாடுகளையும், அதனால் உருவான பயங்கரமான நிகழ்வையும் வெளிப்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் தொடங்கிய விசாரணை, பின்னர் காவல் துறையின் விசாரணையாக மாறியபோதுதான் உண்மைகள் ஒவ்வொன்றாக வெளியே வந்தன.
சுனிதா சாஹு. வயது 32. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர். கடந்த சில நாட்களுக்கு முன் கடுமையான வயிற்று வலியுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு வந்தார். வலியால் முகம் சுருங்கி, பேசவும் சிரமப்பட்ட நிலையில் இருந்தார். மருத்துவர் அவரைப் பரிசோதிக்கத் தொடங்கினார்.
“வயிற்று வலி எப்போதிலிருந்து? என்ன சாப்பிட்டீர்கள்? யாருடனாவது சண்டை போட்டீர்களா?” என்று கேள்விகள் தொடர்ந்தன. சுனிதா அளித்த பதில்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தன. சில நேரங்களில் “எனக்கு ஒன்றும் தெரியாது” என்றார். சில நேரங்களில் “வயிற்றில் ஏதோ சிக்கியிருக்கிறது” என்று முணுமுணுத்தார்.
மருத்துவர் அவரது திருமண வாழ்க்கை குறித்து கேட்டபோதுதான் முதல் அதிர்ச்சி வந்தது.
“நான் திருமணம் செய்துகொண்டிருக்கிறேன். என் மனைவி பெயர் கவிதா யாதவ்” என்று சுனிதா சொன்னார்.
மருத்துவர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். கவிதா யாதவ்..? என்ன பெண்ணின் பெயர் போல இருக்கிறது என்றார். ஆமாம், நான் என் தோழி கவிதாவை திருமணம் செய்து கொண்டேன் என்றாள் சுனிதா.
“ரெண்டு பேரும் தனியா இருந்தீங்களா?” என்று மீண்டும் கேட்டார். சுனிதா தலையசைத்தாள். அதன்பிறகுதான் எக்ஸ்ரே எடுக்க முடிவு செய்யப்பட்டது.
எக்ஸ்ரே படம் வந்ததும் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சுனிதாவின் வயிற்றுப் பகுதியில் நீளமான, உருளை வடிவமான ஒரு பொருள் தெளிவாகத் தெரிந்தது. அது இயற்கையான எந்த உறுப்பும் இல்லை. வெளிப்புறத்திலிருந்து செலுத்தப்பட்ட பொருள் என்பது உறுதியானது.
மருத்துவர் மீண்டும் சுனிதாவிடம் கேட்டார். ஆனால் அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார். மனநிலை பாதிக்கப்பட்டவர் போல அமைதியாக அமர்ந்திருந்தார். உடனடியாக காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் வந்ததும் சுனிதாவை தனியாக விசாரணை செய்தனர். முதலில் அவர் பயத்தோடு இருந்தார். பின்னர் மெல்ல மெல்ல பேசத் தொடங்கினார். அப்போதுதான் கடந்த சில மாதங்களில் நடந்த நிகழ்வுகள் வெளியாயின.
சுனிதாவும் கவிதாவும் ஒரே அலுவலகத்தில் பணியாற்றி வந்தனர். பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த இருவரும் காலப்போக்கில் காதல் உணர்வை வளர்த்துக்கொண்டனர். குடும்ப எதிர்ப்புகளையும் மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். சில மாதங்கள் அமைதியாக வாழ்ந்தனர்.
ஆனால் பின்னர் சுனிதாவின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. பெண்கள் மீதான ஈர்ப்பு தனக்கு இயற்கையானது அல்ல என்ற எண்ணம் அவருக்குள் வளரத் தொடங்கியது.
ஆண்களின் துணைதான் ஒரு பெண்ணான எனக்கு தேவை என்ற உணர்வு படிப்படியாக வலுப்பெற்றது. அதனால் அவர் தன் மனைவியான கவிதாவை மெல்ல வெறுக்கத் தொடங்கினார். பேச்சு குறைந்தது. உறவு முறிவு ஏற்படும் அளவுக்கு தூரம் உருவானது.
இந்த நிலையில் சுனிதா ஆன்லைனில் ஒரு மசாஜ் கருவியை வாங்கினார். அதைப் பயன்படுத்தி தனது உடல் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். ஒருநாள் கவிதா இதைப் பார்த்துவிட்டார்.
“உனக்கு என்ன ஆனது? ஆண்கள் மீது ஆசை வந்துவிட்டதா? அதனால்தான் இதை வாங்கி வைத்திருக்கிறாயா?” என்று கவிதா கோபத்துடன் கேட்டார்.
சுனிதா மறுத்தார். ஆனால் வாக்குவாதம் தீவிரமானது. இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. கவிதா அந்த மசாஜ் கருவியை எடுத்து சுனிதாவின் வாயில் வைத்து திணித்தார். எதிர்பாராத விதமாக அந்த பொருள் தொண்டை வழியாக வயிற்றுக்குள் சென்றுவிட்டது. அது பெரும்பாலும் மென்மையான ரப்பர் போன்ற பொருளால் ஆனது என்பதால் எளிதாக உள்ளே சென்றுவிட்டது.
சுனிதா பயந்துபோனார். அதை எப்படி வெளியே எடுப்பது என்று தெரியாமல் மூன்று நாட்களாக முயற்சி செய்தார். வலி அதிகரித்தது. இறுதியில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மருத்துவமனைக்கு வந்தார்.
விசாரணையில் இந்த உண்மைகள் உறுதியானதும் கவிதா யாதவ் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுனிதாவுக்கு அறுவை சிகிச்சை செய்து அந்தப் பொருள் வெளியே எடுக்கப்பட்டது. அவரது உடல்நிலை இப்போது சீராகி வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு பெண்களின் திருமண உறவில் ஏற்பட்ட நம்பிக்கை முறிவும், கோபமும் இத்தகைய பயங்கரமான நிகழ்வுக்கு வழிவகுத்தது என்பது காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
