குழந்தைகளுக்கு நடந்த கொடுமை: வீடியோ வைத்திருந்தவருக்கு ஏற்பட்ட நிலை!

கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்திலுள்ள ஒரோமொக்டோவைச் சேர்ந்த 44 வயது நபர் மீது, குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான காட்சிகளை வைத்திருந்ததார் எனவும் பரப்புரை செய்ததார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எரிக் எட்வார்ட் கிரிகோயர் என்ற வயதான நபர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

புதன்கிழமை ஃபிரெட்ரிக்டன் மாகாண நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர் மீது, இத்தகைய சட்டவிரோதப் பொருள்களை வைத்திருந்தமை மற்றும் பிறருக்குப் பகிர்ந்தளித்தமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கனடிய பொலிஸின் இணையக் குழந்தை சுரண்டல் தடுப்புப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஓகஸ்ட் 2025 இல் இந்த விசாரணை தொடங்கியது.

ஜனவரி 21, 2026 அன்று ஒரோமொக்டோவில் உள்ள இவரது வீட்டில் சோதனை ஆணை மூலம் ஆய்வு நடத்திய பொலிஸ், கிரிகோயாரைக் கைது செய்து அவரிடமிருந்த பல மின்னணு சாதனங்களைப் பறிமுதல் செய்தது.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்காக இவர் ஓக்டோபர் 7 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார்.