யாழில் 14 வயது சிறுமியை தவறான முறைக்குட்படுத்திய மூன்று ஆண்கள் கைது..!

 வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் 14 வயது சிறுமியை தவறான முறைக்குட்படுத்திய மூன்று ஆண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமி நீண்ட காலமாக இவ்வாறு தவறான முறைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வட்டுக்கோட்டையில் தவறான முறைக்குட்படுத்தப்பட்ட 14 வயது சிறுமி: மூவர் கைது | 3 Arrested In Vaddukoddai Jaffna

இந்நிலையில், சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.