சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன் நடந்த போட்டியில் மும்பை அணிக்காக ஆடிய நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா, 45 பந்துகளில் 76 ஓட்டங்களைப் பெற்று, அணியை வெற்றி பெறச் செய்தார். இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதும் அவருக்கே வழங்கப்பட்டது.
இதன் மூலம், இந்திய வீரர்களில் அதிகபட்சமாக 20 முறை ஆட்ட நாயகன் விருது பெற்ற வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா நிகழ்த்தி உள்ளார்.
இந்த சாதனைப் பட்டியலில் இதுவரை முதலிடத்தில் இருந்த பெங்களூரு அணியின நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி 19 ஆட்ட நாயகன் விருதுகளுடன் 2ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்த பட்டியலில் தென்னாபிரிக்காவின் டி வில்லியர்ஸ் 25 ஆட்ட நாயகன் விருதுகளுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.