இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள 5 கிராமங்களில் சட்டவிரோத மதுபானம் அருந்திய 14 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பங்கலி, பாதல்புரி, மராரி கலன், தெரேவால் மற்றும் தல்வண்டி குமான் ஆகிய 5 கிராமங்களில் நேற்று இரவு சட்டவிரோத மதுபானம் குடித்தவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த பொலிஸார் முக்கிய குற்றவாளிகளான பிரப்ஜித் சிங், குல்பீர் சிங், சாஹிப் சிங், குர்ஜந்த் சிங் மற்றும் நிந்தர் கவுர் ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சட்டவிரோத மதுபானம் அருந்தியவர்கள் குறித்து வீடு வீடாகச் சென்று பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.