இலங்கையில் நாடாளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் உள்ளூராட்சி தேர்தலில் இன்று (06) மதியம் 12 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 30% ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. இன்று மாலை 4 மணி அளவில் பொது மக்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
மதியம் 12 மணி வரை பதிவான வாக்குப்பதிவு வீதம்
மாத்தறை - 42%
மன்னார் - 40%
திருகோணமலை - 36%
பதுல்லா - 36%
காலி - 35%
யாழ்ப்பாணம் - 35%
பொலன்னறுவை - 34%
கேகாலை - 33%
கண்டி 33%
அம்பாறை - 31%
இரத்தினபுரி - 30%
புத்தளம் - 30%
அநுராதபுரம் - 30%
கொழும்பு - 28%