அம்பாறை பாடசாலையொன்றில் ஒன்பது மாணவர்கள் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டு அதிபரான பௌத்த மதகுருவால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் அம்பாறை நகரில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கடந்த 15ம் திகதி இடம்பெற்றுள்ளது.
பிரஸ்தாப பாடசாலையில் கடந்த 15 ஆம் திகதி அன்று பாடசாலை நேரத்திற்கு பின்னர் பிரத்தியேக வகுப்புகள் நடைபெற்றுள்ளது. இதன் போது அன்றைய தினம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட இடைவேளையின் போது கழிப்பறைக்குச் சென்ற பல குழந்தைகள் தண்ணீர் விசிறியடித்து விளையாட்டில் ஈடுபட்டதாக வகுப்பு ஆசிரியரால் பாடசாலை அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மறுநாள் 16.05.2025 அன்று பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் பாடசாலை அதிபர் தனது கையில் மூன்று பிரம்புகளை எடுத்து ஒன்பது குழந்தைகளையும் வரவழைத்து முழங்காலில் நிற்க வைத்து அவர்களின் கைகளை சுவரில் வைத்து பிள்ளைகளின் முதுகில் கொடூரமாக தாக்கியுள்ளார்.
வீடு திரும்பிய பாதிக்கப்பட்ட பிள்ளைகள் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்