பாலியல் துஷபிரயோகத்திற்கு உட்பட்டதாக 13 வயது சிறுமியை இரு பெண்கள் வயோதிபர்களின் பாலியல் தேவையை பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்தி வந்துள்ளனர் என்ற பரபரப்பு தகவல் மக்கள் மனதில் பெரும் பரபரப்பினையும், கோபத்தினையும் ஏற்படுத்தி உள்ளது.
குறித்த சிறிமியை பாலியல் செயற்பாட்டுக்கு பயன்படுத்த மூலகாரணமாக இருந்த மருத்துவமனையில் ஒன்றில் வேலைசெய்யும் கஸ்தூரி என்ற பெண்
வயோதிபர் கொடுத்த பணத்தை வேண்டியதும் சிறுமிக்கு குடிபானம் மட்டும் வழங்கி வந்துள்ளார். தொடர்ந்து அச்சிறுமியை பற்றைக் காடுகளுக்கு கூட்டிச் சென்று இத்தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் மக்கள் தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர்.
மேலும் இச்சிறுமி போன்ற பல சிறுமிகளையும் இவ்வாறு இவர்கள் பயன்படுத்தி வந்ததாகவும், மேலதிக விசாரணைகளை பொலிசார் எடுத்து வருவதாகவும் தெரிய வருகிறது.