டிக்டாக் ஆப் மூலம் விதவிதமான ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு பிரபலமானவர் தான் இலக்கியா. அதில், அரைகுறை ஆடையுடன் குனிந்து நெளிந்து ஆட்டம் போட்டு வாலிப ஆண்களின் மனதில் இடம் பிடித்தார். டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராமில் வீடியோவை வெளியிட்டு பிரபலமான இவர், தற்போது சொந்தமாக வீட்டை வாங்கி குடியேறி உள்ளார். அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.
சாதாரணமான குடும்பத்தில் பிறந்த இலக்கியா, பெரிய நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் ஊரைவிட்டு ஓடிவந்தார். இலக்கியா பெரிய அளவில் படிக்காததால், பஞ்சு மில்லில் தான் அவருக்கு வேலை கிடைத்தது. அந்த வேலையிலும், பல மணி நேரம் நின்று கொண்டு கஷ்டப்பட வேண்டும். அப்படி கஷ்டப்பட்டு வேலை செய்தாலும், பெரிய சம்பளம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், அந்த வேலை கட்டுபடி ஆகாது என்பதால், தனது வசீகரமான அழகை வைத்து, சினிமாவில் நடிகையாகி விடலாம் என முடிவு செய்து வாய்ப்பு தேடி அலைந்தார். அப்போது தான் இலக்கியாவிற்கு நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நீச்சல் குளத்தில் வரம்பு மீறி கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். ஆனால், அந்த படம் வெளியானதா இல்லை என்று கூட யாருக்கும் தெரியவில்லை.
சினிமாவில் எப்படியாவது ஜெயித்துவிடலாம் என்ற ஆசையில் இருந்த இலக்கியாவை, சிலர் பட வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்துள்ளனர். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி இலக்கியா ஏமாந்தும் இருக்கிறார். இதனால், சினிமாவே வேண்டாம் என்று முழுக்கு போட்டுவிட்டு இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். அவ்வப்போது வெளிநாட்டுக்கு டூர் செல்லும் இலக்கியா, துபாயில் விவகாரமான வேலைகளை செய்தும் சம்பாதித்துள்ளார். இதுதொடர்பாக ரௌடி பேபி சூர்யாவுடன் இலக்கியா பேசிய ஆடியோ இணையத்தில் கசிந்தது.
டிக் டாக் இலக்கியா: அண்மையில் ஷகிலாவுக்கு இலக்கியா பேட்டி அளித்திருந்தார். அப்போது, மார்பகம் இவ்வளவு பெரியதாக இருக்கிறது. இதற்கு ஏதாவது ஊசி போடுறியா என கேட்க, அதற்கு நான் எந்த ஊசியும் போடவில்லை, என் அம்மாவிற்கும் அப்படித்தான் இருந்தது. இதனால், எனக்கும் அப்படி பெரிதாக இருக்கிறது. இதற்காக நான் எந்தவிதமான சிகிச்சையும் செய்யவில்லை என கூறியிருந்தார். மேலும், பலரை நம்பி ஏமாந்து இருக்கிறேன் இதனால், இனி மேல் நான் வாழ்க்கையில் யாரையும் நம்ப யாராக இல்லை. யாரும் துணையும் இல்லாமல் நான் தனியாகத்தான் இருக்கிறேன் என்று அந்த பேட்டியில் பேசி இருந்தார்.
புது வீடு: இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கும் டிக் டாக் இலக்கியா, எந்த பண்டிகையாக இருந்தாலும் தனது ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்லி விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அந்த வகையில் தற்போது இலக்கியா சொந்தமாக புது வீடு ஒன்றை வாங்கி அதில் குடியேறி உள்ளார். அந்த வீட்டிற்கு நண்பர்களை அழைத்து கிரகப்பிரவேஷம் நடத்தி இருக்கிறார். அந்த போட்டோக்களை தனது ரசிகர்களுக்காக ஷேர் செய்துள்ளார். அதைப்பார்த்து ரசிகர்கள் லைக்குகளை குவித்து வாழ்த்து தெரிவித்தாலும், சில விஷமிகள், உடலை காட்டி சம்பாதித்த பணம் தானே என மோசமான கமெண்டுகளை போட்டு இலக்கியாவை நோகடித்து வருகின்றனர்.