கொட்டாஞ்சேனையில் பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பிலான போராட்டத்தில் கலந்துக்கொண்ட ஆசிரியர்களுக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதியொருவர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“மேலும் அந்த ஆசிரியர்களின் சொந்த வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த விடயத்தில் காலம் தாழ்த்தாது, தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.