உத்தர பிரதேசத்தில் ஒரு குடும்பம் ஒரு புதிய பசுவை வாங்கி, தங்கள் வீட்டு வாசலில் இரவில் கட்டி வைத்துள்ளார்கள். இரண்டு வாரங்கள் கடந்தன, இரவு வந்ததும், நாய்கள் வாசலில் குரைத்தன. தொடர்ந்து நான்கு இரவுகள் இப்படியே நாய்கள் வாசலில் குரைத்து இருக்கின்றன.
பசுவின் உரிமையாளர் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ஒரு கேமராவை அமைத்து கண்காணித்திருக்கிறார், அவர் அந்த நிகழ்வை பார்த்ததில் ஆச்சரியத்தில் மூழ்கி போயிருக்கிறார். இரவு 10 மணியளவில், ஒரு சிறுத்தை பசுவிடம் வந்திருக்கிறது, அந்த சிறுத்தை அந்த பசுவை எதுவும் செய்யவில்லை, கடிக்கவும் இல்லை, மாறாக அந்த சிறுத்தை அந்த பசுவின் அருகில் வந்து அமர்ந்து அந்தப் பசுவோடு உன் கூட விளையாட ஆரம்பித்து இருக்கிறது. சிறுத்தையும் பசுவும் ஒன்றோடு ஒன்று மிகவும் அன்பாக இருந்திருக்கிறது.
பசுவின் உரிமையாளர் அதை கவனமாக ஆராய்ந்த பின்பு தான் உண்மையான விஷயம் அவருக்கு புரிந்திருக்கிறது. அந்த சிறுத்தை பிறந்து 20 நாட்களே ஆன நிலையில் அந்த சிறுத்தையின் தாயை வேட்டைக்காரர்கள் கொன்று விட்டிருக்கின்றனர். அதனால் இதற்கு முன்பு பசுவின் உரிமையாளராக இருந்தவர், 20 நாட்கள் மட்டுமே ஆன அந்த சிறுத்தை குட்டியை காப்பாற்றி, இந்த பசுவின் பால் கொடுத்து அந்த சிறுத்தையை வளர்த்திருக்கின்றனர். அந்த சிறுத்தை குட்டி வளர்ந்த பிறகு, அதை காட்டில் விட்டுட்டு இருக்கின்றனர்.
அந்த சிறுத்தை இந்த பசுவை தனது தாய் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது போல, அதனால் அந்த பசுவின் வீட்டை நெருங்கி அந்த பசுவை சந்தித்து, இந்த பசுவோடு மகிழ்ச்சியுடன் தினமும் நேரத்தை கழிக்கிறது. இதன் மூலம் விலங்குகளும் உணர்வுகளை கொண்டுள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது.. ஆனால் மனிதர்கள் தான் மிருகங்களைப் போல மாறிக்கொண்டு வருகின்றனர்...