யாழில் ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ். சரசாலை தெற்கு, சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த வைத்திலிங்கம் சிவராஜன் (வயது 71) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
“கடந்த 16ஆம் திகதி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தார்.
இதன்போது கொடிகாமம் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் இருந்த சிமெந்தினாலான உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் மயக்கமடைந்துள்ளார்.
இதன்போது அவரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.