Type Here to Get Search Results !

யாழில் ஒருவர் தவறான முடிவு..!

யாழில் மனவிரக்தியில் முதியவர் ஒருவர் தவாறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில், மாவை கலட்டி, கொல்லங்கலட்டி பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை கதிர்வேல் (வயது 74) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

இவர் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், நேற்று நண்பகல் வீட்டுக்கு அருகிலேயே தவாறான முடிவெடுத்து அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

காங்கேசன்துறை காவல்துறையினர் சாட்சிகளை நெறிப்படுத்தியதுடன் விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad