அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள புகழ் பெற்ற புரூக்ளின் பாலத்தில் மெக்சிகோ கடற்படையின் பயிற்சிக் கப்பல் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று சனிக்கிழமை மாலை பாலத்தில் மோதுவதற்கு முன்னர் அந்த பயிற்சிக் கப்பலில் மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த கப்பலில் 277 பேர் இருந்ததாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெக்சிகோ கடற்படையைச் சேர்ந்த குவாடெமோக் என்ற அந்த பயிற்சிக் கப்பல் சனிக்கிழமை மாலை புரூக்ளின் பாலத்திற்கு கீழே சென்று கொண்டிருந்தபோது அதன் உயரமான கம்பங்கள் பாலத்தின் மீது மோதியதை காணொளிகளில் காணமுடிகின்றது.
இயந்திரக் கோளாறுகள் மற்றும் மின்வெட்டு காரணமாக கப்பல் பாலத்தின் தூண் ஒன்றின் மீது மோதியிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளது.