மருத்துவ ஆய்வகதொழில்நுட்ப வல்லுநர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் பதவிகளுக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்கள் சுகாதார அமைச்சில் நடைபெற்றுள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் தகுதி பெற்றவர்களுக்காக இந்த நேர்காணல்கள் நடத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பதவிக்கு 294 பேரையும், பிசியோதெரபிஸ்ட் பதவிக்கு 200 பேரையும் நியமிக்க சுகாதார அமைச்சு இதுவரை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, நடைபெற்ற நேர்காணலில் தேர்ச்சி பெற்றவர்கள் அந்தப் பதவிகளுக்கான தொடர்புடைய மாற்றீடு மற்றும் சேர்க்கை கற்கைநெறிகளுக்காக ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள்.