பிரதமர் அதிரடி அறிவிப்பு..!

 

சுகாதாரத் துறையில் வசதிகள் மற்றும் தொழில்முறையை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தாதியர்கள் தங்கள் பணியினை மனிதாபிமானத்துடன் நிறைவேற்ற வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.


3,147 தாதியர்களுக்கு நியமனங்களை வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (24) அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்ததாவது,

"பொதுச் சேவையில் தாதியர்களாக இணைந்து, வாழ்க்கையில் புதிய பயணத்தைத் தொடங்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உலகின் மிக முக்கியமானதும் கௌரவமானதுமான தொழில்களில் ஒன்றில் நீங்கள் பிரவேசிக்கிறீர்கள்."

தாதியர் தொழில் என்பது மக்களுக்கு ஒரு அத்தியாவசியமான, தொழில் என்பதற்கு அப்பாற்பட்ட ஒரு மனிதாபிமான சேவையாகும். நாங்கள் யாராக இருந்தாலும் சரி, உங்கள் பாதுகாப்பை நம்பி, தேவைப்படும் நேரங்களில் நாங்கள் உங்களிடம் வருகிறோம்.

மருத்துவத்துவத்திற்கு மேலதிகமாக, உங்கள் புன்னகை, பேசும் விதம், உங்கள் கருணை மற்றும் உங்கள் அக்கறை மூலம் எங்கள் குணப்படுத்துதலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் உங்களுக்கு உள்ளது.

நீங்கள் உங்கள் தொழிலில் பெரும் தியாகங்களைச் செய்து சேவையை வழங்குகிறீர்கள். இது உடல் ரீதியான தியாகம் மட்டுமல்ல, மன ரீதியான தியாகமும் கூட. உட்கார்ந்திருக்க சந்தர்ப்பம் இல்லை. நீங்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படும் நேரங்கள் பல உள்ளன. அந்த தியாகங்கள் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கும். உங்கள் குடும்ப வாழ்க்கை, குடும்பத்தினருடனான உறவுகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனான உறவுகள் அனைத்தும் உங்களைப் பாதிக்கின்றன. அது அவர்களையும் அதே வழியில் பாதிக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும்.

உங்கள் அனைவரின் அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

எங்கள் அரசாங்கத்தின் கொள்கையின்படி, " வளமான நாடு - அழகான வாழ்க்கை" என்பதை அனைவருக்கும் பெற்றுக்கொடுப்பதே எங்கள் முதன்மையான குறிக்கோளாகும். ஒரு அழகான வாழ்க்கையில் ஒரு நல்ல ஆரோக்கியமான குடிமகனை உருவாக்குவது மிகவும் முக்கியம். உடல் ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். அதற்காக, ஒரு அரசாங்கமாக, சுகாதார முறைமையை வலுப்படுத்துவதற்கும், அதற்குள் உள்ள தொழில்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பயிற்சிகளை வழங்குவதற்கும் நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் தாதியர்களுக்கு அதிக தேவை உள்ளது. உங்கள் தொழில்முறை கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கு பொருத்தமான சம்பளம், தேவையான பதவி உயர்வுகள் மற்றும் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள தேவையான பயிற்சிகளை வழங்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துவருகிறோம். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமான ஒரு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தொழிற் சூழலை உருவாக்குவது மிகவும் முக்கியம். இந்த எல்லா விடயங்களிலும் உங்கள் அமைச்சரும் அமைச்சும் தலையிடுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

தாதியர் தொழிலில் அதிகமாகக் காணப்படுகின்றவர்கள் பெண்கள். நமது சமூகத்தில், ஒரு மனைவி மற்றும் தாயிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பல பொறுப்புகள் உள்ளன. தாதியர்கள் என்பதால் அவற்றிலிருந்து விலகியிருக்க முடியாது. அரசாங்கம் என்ற வகையில், இந்த நிலைமையை புரிந்துகொள்வதுடன், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை நன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதை எங்கள் பொறுப்பாக எடுத்துக்கொள்கிறோம் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.