கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று கித்துல்கல பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்றையதினம்(17.05.2025) இடம்பெற்றுள்ளது.
வேகமாக பயணித்த கார் ஒன்று பேருந்தின் பக்கவாட்டில் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக விபத்தில் எவரும் படுகாயமடையவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.