அடிக்கடி விபத்துக்கள் நிகழும் 773 இடங்கள் அடையாளம்..!

 

வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களால் கவனம் செலுத்தப்படாத, அடிக்கடி விபத்துக்கள் நிகழும் 773 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவற்றில் போக்குவரத்து விபத்துக்கள் அதிகமாக நிகழக்கூடிய 722 இடங்கள் காணப்படுவதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

வீதி மேம்பாட்டு அதிகாரசபையின் கீழ் உள்ள பிரதான வீதிகளின் 340 இடங்களில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படக்கூடிய இடங்கள் உள்ளதாகவும், அவற்றில் 329 இடங்கள் அதிக ஆபத்துள்ள இடங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண வீதி மேம்பாட்டு அதிகாரசபையின் எல்லைக்குள் 156 இடங்கள் விபத்துக்கள் ஏற்படக்கூடிய இடங்கள் என்றும், அவற்றில் 150 இடங்கள் அதிக ஆபத்துள்ள இடங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உள்ளூராட்சி நிறுவனங்களின் எல்லைக்குள் 277 இடங்கள் காணப்படும் நிலையில் அவற்றில் 243 இடங்கள் அதிக ஆபத்துள்ள இடங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீதிகளை விரைவில் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு வீதி மேம்பாட்டு ஆணையம் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp சனலை follow செய்வும்.

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.