மது விருந்தால் வந்த வினை-ஒருவர் துடிதுடிக்க அடித்து கொலை..!

 

நேற்று (13) இரவு ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பர பகுதியில் தடி ஒன்றால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

கொலை செய்யப்பட்டவர்  63 வயதுடைய தம்பர, மீவனபலான பகுதியைச் சேர்ந்தவராவார்.

இவர் தனது வீட்டில் நபரொருவருடன் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததால், சந்தேகநபர் அவரது தலையில் தடி ஒன்றால் தாக்கியதில் இந்தக் கொலை இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சந்தேகநபர், கொல்லப்பட்டவரின் உறவினர் ஒருவரின் மகன் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

ஹொரணை பொலிஸார், இச்சம்பவம் தொடர்பாக 43 வயதுடைய சந்தேகநபரை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். 

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post