யாழ் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட அறுகுவெளி பிரதேசத்தில் ஜஸ் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் இன்று சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
யாழ்- சாவகச்சேரி அறுகுவெளி பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இருவர் நிற்பதாக சாவகச்சேரி பொலிஸ்நிலையத்தின் கீழ் இயங்கும் போதைப்பொருள் குற்றச்செயல் தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களுக்கு அமைவாக குறித்த பகுதியில் வைத்து யாழ்ப்பாணம் பொம்மைவெளியை சேர்ந்த 22,28 வயதான இரண்டு இளைஞர்களை கைது செய்து சோதனையிட்டபோது உடைமையில் ஜஸ் போதைப்பொருள் காணப்பட்டதாகவும் இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ஜஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்