புதன்கிழமை, 30 ஜூலை 2025
மேஷம்
aries-mesham
பெயரும், புகழும் உயர்ந்து பெருமை தரும் . வாகன, போஜன சுகங்கள் வளரும் நாள். உனக்கென்னையா ராஜா ! என உறவுகள் உரைக்கும் உன்னத நாள். புத்தாடை, ஆபரணம் புதிதாகச் சேரும் நாள்.
ரிஷபம்
taurus-rishibum
எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் அதிகாரிகளுக்கு திருப்தி இருக்காது. ஆரோக்கியக் குறைவு, பயணத்தில் தடங்கல்கள் ஆகியவை ஏற்படும். வீட்டில் பொருட்கள் காணாமல் போகலாம்.
மிதுனம்
gemini-mithunum
மனதில் கலக்கம் ஏற்படும். வீண் செலவுகள் பயணங்களில் தடங்கல்களும் ஏற்படும். தாய்க்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படும். இந்த நாள் இனிய நாளாக இறைவனை இறைஞ்சுவதைத் தவிர வழியேதும் இல்லை.
கன்னி
virgo-kanni
மனத் திருப்தி மற்றும் தனவரவு தரும் மகிழ்வான நாள். வாக்கு வன்மையால் பயன் பெரும் வளமான நாள். நோக்கும் இடமெல்லாம் ஒளி மிக்க வழி தெரியும் முன்னேற்றமான நாள்.
மகரம்
capricorn-magaram
மனதில் அமைதியும், தெய்வீகத் திருப்பணிகளில் ஈடுபாடு நிலவும். சுகம், சந்தோஷம் மற்றும் உல்லாசப் பயணங்கள் ஆகியவை ஏற்படும். அரசு ஆதரவும், பெரியோரால் நன்மைகளும் உண்டு.
கடகம்
cancer-kadagam
எதிர்பார்த்த இனங்களில் இருந்து தடையின்றி தனவரவு அதிகரிக்கும். புத்தி தெளிவு பெற்று ஆதாயம் தரும் புதுப்புது சிந்தனைகள் தோன்றும். சகோதரரால் நன்மைகள் ஏற்படும்.
சிம்மம்
leo-simmam
பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்துங்கள். வம்பு, வழக்கு மற்றும் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டிய நாள். தனநாசம் ஏற்பட்டு அதனால் கவலைகள் அதிகரிக்கும். உடல் சோர்வு ஏற்படும்.
துலாம்
libra-thulam
கோபத்தால் வம்பு தும்பு விலைக்கு வாங்க திருப்பது விவேகம் புத்தி தெளிவின்மையால் மதியம் வரை நிம்மதியற்ற நிலை தென்படும். பெண்களின் பேராசை காரணமாக வெட்டி செலவுகள் ஏற்படும்.
மீனம்
pisces-meenam
காதல் உறவு கனிந்து களிப்புறும் நாள். மனைவி மூலம் நன்மையும், மகிழ்வும் பெருகும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். தொழில் அபிவிருத்திக்கான திட்டங்கள் ஈடேறும்.
தனுசு
sagittarius-thanusu
புதிய உத்தியோகமும், உத்வேகமும் ஏற்படும் நாள். பணியில் பணிவும், துணிவும் இருந்தால் முன்னேற்றம் ஏற்படும். பெண்களால் இலாபமும், போகமும் உண்டு.
விருச்சிகம்
scorpio-viruchagam
புது தெம்பும், புத்தொளியும் ஏற்படும். ஆராய்ச்சி மனப்பான்மையால் ஆதாயம் உண்டு. பலவகையிலும் தன லாபங்கள் ஏற்படும். பிறருக்கு உதவுவதால் மனம் பேரின்பம் அடையும். .
கும்பம்
aquarius-kumbam
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. நினைத்தபடி எதுவும் நடக்காது. வழக்கு விவகாரங்களில் வாழ்க்கையில் புது திருப்பங்கள் ஏற்படும். மனைவியின் கலகத்தால் உறவுக்குள் பகை ஏற்படும்.
