5 வருட காதல் பெற்றோர் மறுப்பு-காட்டில் சடலமாக தொங்கிய ஜோடிகள்..!

 

காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிக்காத நிலையில், காதல் ஜோடி ஒன்றாக தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடக மாநிலம் பெலகாவியில் வசித்து வருபவர் ராகவேந்திரா யாதவ்(28). அதே பகுதியைச் சேர்ந்த ரச்சிதா (26) எனும் பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். 


இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த நிலையில்,

இவர்களது காதல் விவகாரம் இருவீட்டு பெற்றோர்களுக்கும் தெரிய வந்தது. இருவரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக ரச்சிதாவுக்கு, அவருடைய பெற்றோர் வேறொரு இளைஞருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர்.


இதனையடுத்து மீண்டும் அவரது காதலன் ரட்சிதா வீட்டிற்கு சென்று அவருடைய பெற்றோரிடம் பேசினார். ஆனால் தங்களுடைய பெண்ணை தருவதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர்.

அதே நேரத்தில் இளைஞரின் வீட்டிலும் இவர்களது திருமணத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியது.


இதனால் மன வேதனையில் இருந்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறியது. வனப்பகுதியில் நிறுத்தப்பட்ட ஆட்டோவில் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இது குறித்து காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையின் படி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆட்டோவில் வைத்து இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post