இனி வரும் காலங்களில் குழந்தையின் பிறப்புசான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விபரம் தேவையில்லை
பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விபரத்தைச் சேர்ப்பதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
பிறந்து 2 நாட்களே ஆன சிசு ஒன்று வயல் ஒன்றில் இருந்து நேற்றைய தினம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
