இலங்கையில் ஆசை ஆசையாய்-மகளின் திருமணத்தில் நடனமாடிக் கொண்டிருந்த தந்தை : நொடிப் பொழுதில் பிரிந்த உயிர்!!
தனது மகளின் திருமணத்தில் நடனமாடிக் கொண்டிருந்த தந்தை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாதுவ மொல்லிகொட பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர், வாதுவ பகுதியில் நடைபெற்ற தனது மகளின் திருமண விழாவின் இறுதியில் நடனமாடிக் கொண்டிருந்துள்ளார்.
இதன்போது திடீரென மயங்கி விழுந்த அவரை, உறவினர்கள் பாணந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்
கருத்துரையிடுக
கருத்துரையிடுக
Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.
Copied code!
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.