இன்ஸ்ரா காதல்-திருமணத்திற்கு பெற்றோர் சேர்த்து வைத்த பணத்தை காதலனுக்கு திருடி கொடுத்த மற்றுமொரு 19 வயது காதலி..!

 

இந்தியாவின், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய நாக அட்சயா சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் நாக அட்சயாவுக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த லிவின் (22 வயது) என்ற வாலிபரின் அறிமுகம் கிடைத்துள்ளது. 

அவர் நாக அட்சயாவை காதலிப்பதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார். 

இதற்கு நாக அட்சயாவும் சம்மதம் தெரிவித்து உள்ளார். 

இதையடுத்து லிவின், தனியாக வசிக்க வீடு பார்ப்பதற்கு பணம் தருமாறு கேட்டுள்ளார். 

இதை நம்பிய நாக அட்சயா, காதலன் லிவினை கர்நாடகாவில் இருந்து ராஜபாளையத்துக்கு வரவழைத்து தனக்காக பெற்றோர் சேர்த்து வைத்திருந்த 25 பவுன் தங்க ஆபரணங்களை அவரிடம் கொடுத்துள்ளார். 

அதை பெற்றுக்கொண்டு கர்நாடகா திரும்பிய லிவின், தனக்கு பணம் போதவில்லை. எனவே மேலும் 50 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என நாக அட்சயாவிடம் கேட்டுள்ளார். 

இதற்கிடையே லிவினின் பேச்சு, நடவடிக்கையில் சந்தேகமடைந்த நாக அட்சயா ராஜபாளையம் வடக்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தார். 

பின்னர் லிவினிடம் மீண்டும் ராஜபாளையம் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். 

இந்த நிலையில் லிவினின் வருகைக்காக காத்திருந்த பொலிஸார் திட்டமிட்டபடி அவரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். 

மேலும் நாக அட்சயாவிடம் இருந்து பெற்ற 25 பவுன் தங்க ஆபரணங்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post