அரச ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வா-ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்..!

 அரச சேவையை வலுப்படுத்தும் வகையில், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட சம்பள உயர்வு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு அடுத்த ஆண்டு சம்பள உயர்வு வழங்குவதற்காக ரூ. 11,000 கோடி ஒதுக்கப்படும் என்றும், 2027 ஆம் ஆண்டுக்கான அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக ரூ. 11,000 கோடி ஒதுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று (05) நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் (SASA) 41 ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். 

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து ஜனாதிபதி வெளியிட்ட தகவல் | President Announces Pay Hike For Govt Staff

கவர்ச்சிகரமான அரச சேவையை உருவாக்குவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும், இதற்காக அரச நிர்வாக அதிகாரிகளின் அர்ப்பணிப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.

தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு அரச சேவையிலுள்ள சிறுகுழுவினால் கொடுக்கல் வாங்கலாக மாற்றப்பட்டுள்ளது என்றும், சமூக விழுமியங்களை விட நிதி மதிப்புகளுக்கு முன்னுரிமை அளித்த அரச சேவை அந்த சூழ்நிலையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.  

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.