பனை மரம் அருகே விளையாடிய சிறுவன் துடிதுடித்து பலி..!

 தமிழகத்தில் கதண்டு (Yellow Jacket Wasp) கடித்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் பல மாவட்டங்களில் இதுபோன்ற துயர சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம் செம்பாக்கத்தில் ஏழு வயது சிறுவன் அர்த்தனேஷ், பனைமரத்தில் இருந்து கதண்டு கடித்ததில் உயிரிழந்த சம்பவம் சமீபத்திய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதே சம்பவத்தில் மேலும் இரண்டு பெண்கள் மற்றும் நான்கு சிறுவர்கள் கடிக்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்துள்ளனர்.

ஜூலை மாதத்தில் பதிவான உயிரிழப்புகள்:நெல்லை மாவட்டம், திருக்குருங்குடி

  1. (ஜூலை 1): ஏழு வயது சிறுவன் ஜீவானந்தம் கதண்டு கடித்து உயிரிழந்தான்.தென்காசி, சீவநல்லூர்
  2. (ஜூலை 21): கோயிலுக்கு சென்று திரும்பிய கணவன்-மனைவி லட்சுமணன் மற்றும் மகராசி (இருவருக்கும் 60 வயதுக்கு மேல்) கதண்டு கடித்து உயிரிழந்தனர்.கரூர், மேட்டு திருக்காம்புளியூர்
  3. (ஜூலை 29): கூலித்தொழிலாளி வேலுச்சாமி (வயது 40) கதண்டு கடித்து உயிரிழந்தார்.

கதண்டு ஏன் ஆபத்தானது?

கதண்டு, மஞ்சள் நிறத்தில், தேனீக்களைப் போல கூட்டமாக வாழும் பூச்சியாகும். இவை தேனீக்களை விட பெரியவை மற்றும் கருப்பு, சிவப்பு, பழுப்பு, மஞ்சள் கலந்த தோற்றம் கொண்டவை.

இவற்றின் விஷத்தில் மேஸ்டோபாரன் (Mastoparan) மற்றும் பாஸ்போலைபேஸ் A1 (Phospholipase A1) என்ற இரு வகை விஷங்கள் உள்ளன, இவை உயிரிழப்புக்கு முக்கிய காரணமாகின்றன.

கதண்டு ஒன்று கொல்லப்படும்போது, அதன் உடலில் இருந்து வெளிப்படும் துர்நாற்றம் மற்ற கதண்டுகளை ஆக்ரோஷமாக தாக்க தூண்டுகிறது. இதனால், ஒரு கதண்டு கடித்தால், கூட்டமாக வந்து தாக்கும் ஆபத்து உள்ளது.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பூச்சியல் துறை தலைவர் பேராசிரியர் முருகன் கூறுகையில், “காடுகள் அழிக்கப்பட்டதால், கதண்டுகள் தென்னை, பனை மரங்களில் கூடுகட்டி ஊருக்குள் இடம்பெயர்ந்து வாழ்கின்றன.

சென்னை போன்ற பெருநகரங்களிலும் மரங்கள், பயன்படுத்தப்படாத கட்டிடங்கள், மரக்கட்டைகள் அடுக்கப்பட்ட இடங்களில் இவை கூடுகட்டுகின்றன,” என்றார்.

தேனீ, குளவி, கதண்டு: வித்தியாசம்

பேராசிரியர் முருகன் விளக்குகையில், “தேனீக்கள் மற்றும் கதண்டுகள் கூட்டமாக வாழ்பவை. குளவிகள் தனித்து மண்ணில் அல்லது பிற இடங்களில் கூடு கட்டுகின்றன.

கதண்டுகள் தேனீக்களை விட இரு மடங்கு பெரியவை மற்றும் வலிமையான விஷம் கொண்டவை. ஒவ்வாமை உள்ளவர்களுக்கு மூன்று அல்லது நான்கு கதண்டு கடிகள் கூட உயிரிழப்பை ஏற்படுத்தலாம்,” என்றார்.

தற்காப்பு முறைகள்:

கண்காணிப்பு: வீடுகளைச் சுற்றியுள்ள மரங்கள், புதர்கள், பயன்படுத்தப்படாத கட்டிடங்களை கண்காணிக்கவும்.

கதண்டு கூடு அகற்றல்: கதண்டு கூடு கண்டறியப்பட்டால், தன்னிச்சையாக அகற்ற முயற்சிக்காமல், தீயணைப்பு துறையை அணுகவும்.

ஒவ்வாமை பரிசோதனை: மருத்துவ பரிசோதனைகள் மூலம் கதண்டு விஷத்துக்கு ஒவ்வாமை உள்ளதா என தெரிந்து கொள்ளலாம். ஒவ்வாமை உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையுடன் மருந்துகளை கையில் வைத்திருப்பது நல்லது.

குழந்தைகளுக்கு எச்சரிக்கை: கதண்டு கூடுகள் உள்ள இடங்களில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக் கூடாது.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.