யாழ்ப்பாணம், புங்குடுதீவில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
புங்குடுதீவு, முதலாம் வட்டாரத்தில் நேற்று (10) இரவு 7.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
பேருந்து உரிமையாளரான அகிலன் என்பவரே கொல்லப்பட்டார். அவர் வீட்டிலிருந்த போது, ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், வாள்களால் அவரை கொடூரமாக வெட்டினர். அதை தடுக்க வந்த அயல்வீட்டில் வசிக்கும் உறவினரான இளைஞனும், இரண்டு பெண்களும் காயமடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புங்குடுதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அகிலன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
