இன்று யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் உந்துருளியும், மகிழுந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது.
யாழ்ப்பாணப் பக்கத்தில் இருந்து காங்கேசன்துறை பக்கம் நோக்கி குறித்த மகிழுந்து பயணித்துக் கொண்டிருந்தவேளை உந்துருளியில் சென்ற நபர் அவதானமின்றி திடீரென வீதியைக் கடக்க முற்பட்டவேளை உந்துருளியும், மகிழுந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியது.
உந்துருளியும், மகிழுந்தும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இருப்பினும் உயிர்ச் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை.
