இன்று காலை மட்டக்களப்பு கொழும்பு சாலையில் பொலன்னறுவை மின்னேரியாவில் பாரிய விபத்து 28 பேருக்கு காயம்
கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியில் மின்னேரியாவில் உள்ள பத்துஓயா பாலத்திற்கு அருகில் இன்று (12) காலை 3.00 மணியளவில் மதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த டிப்பர் லாரியுடன் மோதியதில் 28 பேர் காயமடைந்தனர்
காயமடைந்தவர்கள் பொலனறுவை, மின்னேரியா ஹிங்கிராங்கொடை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்






