ஆபாசமாக வலை விரித்த அழகி-சிக்கிய வைத்தியர்-பின்னர் அரங்கேறிய கொடூரம்..!

 


சென்னை திருவெற்றியூர் சத்துமாநகர் பகுதியைச் சேர்ந்த 26 வயது நித்யாவின் மர்ம மரணம், ஐடி ஊழியர் என்ற முகமூடியில் மறைந்திருந்த விபச்சார வலை மற்றும் கொடூர கொலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.


ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, வீடியோ கால் மூலம் ஆண்களை மயக்கி பணம் பறித்து வந்த நித்யா, மருத்துவர் ஒருவரால் கொலை செய்யப்பட்டது, சிசிடிவி காட்சிகள் மற்றும் காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.


நித்யா, கடந்த ஐந்து ஆண்டுகளாக அம்பத்தூரில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிவதாகக் கூறி, பெற்றோர் மற்றும் உறவினர்களை ஏமாற்றி வந்தார். 

ஆனால், உண்மையில் அவர் வீடியோ கால் மூலம் ஆபாச உரையாடல்களில் ஈடுபட்டு, முகத்தை முழுசா காட்டணுமா.. அதுக்கு ஒரு ரேட்டு.. உடம்பை முழுசா காட்டணுமா.. அதுக்கு ஒரு ரேட்டு.. என ஆண்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறிப்பதை தொழிலாகக் கொண்டிருந்தார்.


கடந்த இரண்டரை ஆண்டுகளாக, வீட்டை விட்டு வெளியேறி, தனியாக வாடகை வீடு எடுத்து வாழ்ந்து வந்தார். இதற்கிடையில், கொடுங்கையூர் விவேகானந்தா காலனியைச் சேர்ந்த 28 வயது பாலமுருகனுடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியது.


ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வேலை தேடி வந்த பாலமுருகனுடன், அம்பத்தூரிலும், பின்னர் கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனியிலும் ‘லிவிங் டுகெதர்’ முறையில் வாழ்ந்து வந்தார்.

நித்யாவின் ஆடம்பர வாழ்க்கை மற்றும் மது போதைக்கு அடிமையாதல், அவரை மேலும் சட்டவிரோத செயல்களுக்கு இழுத்தது. பார்ட்டிகள், பப்களுக்கு அடிக்கடி சென்று, ஆண்களுடன் நெருக்கமாகப் பழகி, பணம் மற்றும் நகைகளை பறித்து வந்தார்.


இதில், ஆலந்தூரைச் சேர்ந்த மருத்துவர் சந்தோஷ் குமார் (32) என்பவரும் நித்யாவின் வீடியோ கால் வலையில் விழுந்து, சுமார் 5 லட்சம் ரூபாய் இழந்தார். பாலமுருகனும் இதேபோல், 5 சவரன் நகைகள் மற்றும் பணத்தை நித்யாவிடம் இழந்திருந்தார்.


கடந்த ஆகஸ்ட் 5, 2025 அன்று, நித்யாவின் பெற்றோர் அவரைப் பார்க்க வருவதாகக் கூறியதால், பாலமுருகனை வெளியே அனுப்பிவிட்டு, பெற்றோரை சந்தித்தார். அன்று மாலை 5 மணியளவில், பாலமுருகன் வீடு திரும்பியபோது, கதவு திறந்த நிலையில் இருந்தது.


உள்ளே சென்று பார்த்தபோது, நித்யா விஷம் உட்கொண்டு மயங்கிய நிலையில் இருந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நித்யா, ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 


கொடுங்கையூர் காவல்துறையினர், உடலை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.


நித்யாவின் பெற்றோர், 25 சவரன் நகைகள் மாயமானதாகவும், பாலமுருகன் கொலை செய்திருக்கலாம் எனவும் புகார் அளித்தனர். ஆனால், பாலமுருகன், நித்யாவின் தாயார் அவரிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், சம்பவத்தன்று 4,000 ரூபாய் எடுத்ததாகவும் கூறினார்.


மேலும், நித்யாவுடன் திருமணமானதாகவும், பின்னர் அவர் தாலியை கழற்றிவிட்டதாகவும் தெரிவித்தார்.காவல்துறையினர், நித்யாவின் செல்போனை ஆய்வு செய்தபோது, அவர் கடைசியாக மருத்துவர் சந்தோஷ் குமாருடன் பேசியது தெரியவந்தது.


சந்தோஷ் குமாரை விசாரித்தபோது, நித்யாவின் உண்மையான தொழில் அம்பலமானது. அவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றவில்லை என்பதும், வீடியோ கால் மூலம் ஆண்களை ஏமாற்றி பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது.


சந்தோஷ் குமார், நித்யாவின் தொடர் வற்புறுத்தல் மற்றும் பண இழப்பால் விரக்தியடைந்து, சம்பவத்தன்று அவரது வீட்டிற்கு சென்று, மதுவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து, பின்னர் தலையணையால் அழுத்தி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.


மேலும், நித்யாவின் நகைகளை திருடி, தனது கூட்டாளி முஜ்பூர் பாஷாவிடம் ஒப்படைத்ததாக தெரிவித்தார்.சிசிடிவி காட்சிகள், சந்தோஷ் குமார் சம்பவத்தன்று நித்யாவின் வீட்டிற்கு சென்றதை உறுதிப்படுத்தியது. இதையடுத்து, சந்தோஷ் குமார் மற்றும் முஜ்பூர் பாஷா ஆகியோர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர்.


நகைகளும் மீட்கப்பட்டன. நித்யாவின் ஐடி ஊழியர் என்ற பொய்யான முகமூடி, அவரது ஆடம்பர வாழ்க்கை மற்றும் மது போதைக்கு அடிமையாதல், இறுதியில் இந்த கொடூர முடிவுக்கு வழிவகுத்தது.


இந்த சம்பவம், ஐடி துறையில் உழைக்கும் பெண்களின் மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் செயல்களையும், சட்டவிரோத தொழில்களின் ஆபத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.


ஆசை மற்றும் ஆடம்பரத்திற்காக வழி தவறுவது, குற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதற்கு இந்த வழக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post