யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியில் வெட்டிக் கொல்லப்பட்டவரின் சடலத்துடன் பொதுமக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சில நாட்களின் முன்னர் புங்குடுதீவு பகுதியில் தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டிருந்தார்.
கொலையை செய்தவர் என குறிப்பிடப்படுபவர் மீது உயிரிழந்தவர் முறைப்பாடு செய்திருந்தும் பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென குறிப்பிட்டு, உயிரிழந்தவரின் சடலத்துடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
