கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில், பிரைம் மூவர் வாகனத்தில் கொள்கலன் ஒன்றை ஏற்ற முயற்சிக்கும்போது, அது மற்றொரு கொள்கலனுடன் மோதி வாகனத்தின் மீது விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில், சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில், பிரைம் மூவர் வாகனத்தின் சாரதி பலத்த காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கொழும்பு துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
