மூதூர் கோர விபத்தில் காயமடைந்த இருவரில் ஒருவர் உயிரிழப்பு
இன்று அதிகாலை மூதூர் பிரதேசத்தில் ஏற்ப்பட்ட பாரிய விபத்தில் படுகாயமடைந்த இருவரில் தோப்பூரைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றையவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்
இவ் விபத்து பற்றி மேலும் தெரியவருவதாவது திருகோணமலையில் இருந்து தோப்பூர் நோக்கி வந்த டிப்பர் ரக லாரியுடன் தோப்பூரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த காரும் மூதூர் பச்சநூர் சந்தியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
