ஒரு தைரியமான இளைஞர், செல்போனில் மறைமுகமாக வீடியோ பதிவு செய்து, இந்த மையத்தில் நடக்கும் மறைமுக விபச்சாரத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.
சம்பவத்தன்று, குளுகுளு ஏசியுடன் கூடிய வரவேற்பறையில், ஒரு இளம் பெண் அவரை வரவேற்றார். “என்ன சர்வீஸ் வேண்டும்? எவ்வளவு நேரம்?” என்று கேட்டார்.
“ஒரு மணி நேரம், செலவு எவ்வளவு?” என்று இளைஞர் விசாரிக்க, “1500 ரூபாய், முக்கால் மணிக்கு 1000 ரூபாய்,” என்று பதில் வந்தது. “பெண்ணை எப்படி தேர்ந்தெடுப்பது?” என்ற கேள்விக்கு, அந்தப் பெண், “தூசிங்கிற்கு வந்து நில்லுங்க,” என்று கூற, 20-25 வயது மதிக்கத்தக்க ஐந்து பெண்கள் அணிவகுத்து வந்து தங்களை அறிமுகப்படுத்தினர்.
“இவர்களில் யாரை வேண்டுமானாலும் செலக்ட் பண்ணிக்கோங்க. இங்கேயே வைத்துக்கொள்ளலாம் அல்லது வெளியே அழைத்துச் செல்லலாம்,” என்று வரவேற்பறை பெண்மணி தெரிவித்தார், மற்றொரு ஆணை அறிமுகப்படுத்தி, “இவர் உங்களுக்கு உதவுவார்,” என்றார்.
இந்த வீடியோவை வெளியிட்ட அந்த இளைஞர், பெண்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் முகங்களை மறைத்து, இத்தகைய மையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்த சம்பவம் இணையத்தில் பரவ, பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை தூண்டியது. சிலர், “மனிதனின் இயற்கையான உணர்வுகளை தீர்க்க ஒரு இடம் தேவை. விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கினால் பாலியல் குற்றங்கள் குறையும்,” என்று வாதிட்டனர்.
மறுபுறம், “விபச்சாரம் தவறு. ஆண்கள் தங்கள் மனைவியை மட்டுமே நாட வேண்டும். இல்லையெனில், தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்று எதிர்கருத்து தெரிவித்தனர்.
மற்றவர்கள், “சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்பவர்கள், தங்கள் வீட்டுப் பெண்களை இத்தொழிலுக்கு அனுப்ப தயாரா?” என கேள்வி எழுப்பினர்.இந்த மறைமுக விபச்சார மையத்தின் வெளிப்பாடு, சமூகத்தில் பாலியல் தொழில் குறித்த சட்ட மற்றும் ஒழுக்க விவாதங்களை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.
இத்தகைய மையங்களை கண்காணித்து, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் வலியுறுத்துகிறது.
