விடிய விடிய கொடுமை.. வசமாக சிக்கிய லட்சுமி மேனன் வீடியோ..

 


புதிய சிந்தனை’ யூட்யூப் சேனலில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில், நடிகை லட்சுமி மேனன் தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.


தமிழ் திரையுலகில் ‘குடும்ப குத்துவிளக்கு’ இமேஜுடன் அறிமுகமான லட்சுமி மேனன், தற்போது மது அருந்துவது, பார்களில் சண்டையில் ஈடுபடுவது போன்ற சர்ச்சைகளில் சிக்கியிருப்பதாக ரங்கநாதன் தெரிவித்தார்.

குடி முத்திரையால் தமிழ் சினிமாவில் வாய்ப்பு இழப்பு

பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், “லட்சுமி மேனன் மது அருந்துவதாகவும், பார்ட்டிகளில் ஆடை கிழிந்து, மது மயக்கத்தில் பிரச்சினைகள் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.


இதனால் தமிழ் சினிமாவில் அவருக்கு ‘குடிகாரி’ என்ற முத்திரை குத்தப்பட்டு, தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் அவரை ஒதுக்கிவிட்டனர். இதனால் தமிழ் சினிமாவில் வாய்ப்பு இழந்து, கேரளாவில் பரதநாட்டிய பள்ளி நடத்தி வருகிறார்,” என்று குறிப்பிட்டார்.


கேரளாவில் பார் சண்டை சம்பவம்

கேரளாவில் நடந்த பார் சம்பவம் குறித்து பேசிய ரங்கநாதன், “லட்சுமி மேனன் தனது தோழியுடன் பாருக்கு சென்றபோது, மது மயக்கத்தில் ஒரு நபருடன் தகராறு ஏற்பட்டது.



இதனைத் தொடர்ந்து, அந்த நபரை அவரது குழுவினர் காரில் கடத்தி, கடுமையாக தாக்கியுள்ளனர். பேண்டை கழட்டி அந்த உறுப்பை கசக்கி கொடுமை படுத்தியுள்ளனர்.இது இருந்தால் தானே பிரச்சனை என சொல்லி சொல்லி ஐடி ஊழியரின் மர்ம உறுப்பை கசக்கி கொடுமை படுத்தியுள்ளனர்.


மேலும், முகத்தில் அடித்தால் ஐடி ஊழியரின் உதடு கிழிந்துள்ளது. சுமார், 4-5 கிலோமீட்டர் தொலைவில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். விடிய விடிய வலி கொடுமையில் துடித்த அந்த ஐடி ஊழியர் காவல் துறையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



அந்த நபர் புகார் அளித்ததால், முன்ஜாமீன் பெற்று தப்பித்தாலும், இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது, காவல் துறை வசம் CCTV காட்சிகள் சிக்கியுள்ளது” என்றார்.


நடிகைகளின் மாறும் பிம்பம்

நடிகைகளின் மாறிவரும் வாழ்க்கை முறை குறித்து பயில்வான் கூறுகையில், “கலியுகம் முத்திரை பதித்துவிட்டது. ஆண்கள் மது அருந்துவது போலவே, பெண்களும் தற்போது பார்களுக்கு செல்கின்றனர்.



சண்டைகளில் ஈடுபடுகின்றனர். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, கேரளாவிலும் நடக்கிறது. கேரளாவில் பார்கள் அமைதியாக இருக்கும் என நினைத்தால், இப்போது அங்கும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன,” என்று குறிப்பிட்டார்.


தமிழ் சினிமாவில் லட்சுமியின் பயணம்

லட்சுமி மேனன், சசிகுமார், விக்ரம் பிரபு, விஷால் ஆகியோருடன் நடித்து புகழ் பெற்றவர். ‘பாண்டியநாடு’ உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.


இருப்பினும், வெற்றி படங்கள் இல்லாததால், அவருக்கு வாய்ப்புகள் குறைந்து, ‘ராசி இல்லாதவர்’ என்ற முத்திரை குத்தப்பட்டதாகவும், இதனால் மது மயக்கத்தில் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கியதாகவும் ரங்கநாதன் தெரிவித்தார்.


சமூக மாற்றமும், நடிகைகளின் வாழ்க்கை முறையும்


நடிகைகளின் மாறிவரும் வாழ்க்கை முறை குறித்து பேசிய ரங்கநாதன், “பெண்களும் ஆண்களுக்கு சமமாக மது அருந்துவது, சிகரெட் புகைப்பது போன்றவை இப்போது சகஜமாகிவிட்டன.


முன்பு ஒரு பெண் மது வாங்கினால் ஆச்சரியமாக பார்க்கப்பட்ட நிலை மாறி, இப்போது அவர்கள் சுதந்திரமாக பார்களுக்கு செல்கின்றனர். இது சமூக மாற்றத்தின் ஒரு பகுதி,” என்று கூறினார்.


லட்சுமியின் தனிப்பட்ட வாழ்க்கை


லட்சுமி மேனனுக்கு திருமணம் செய்ய விருப்பமில்லை என்றும், சினிமாவில் உயர்ந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்று முயற்சித்து, இதுபோன்ற சம்பவங்களால் பின்னடைவை சந்தித்ததாகவும் ரங்கநாதன் தெரிவித்தார்.


“அவருக்கு பெற்றோர் மேற்பார்வை இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். மேனேஜர்கள் இருந்தாலும், அம்மாவின் வழிகாட்டுதல் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம்,” என்று அவர் குறிப்பிட்டார்.


லட்சுமி மேனனின் இந்த சர்ச்சைகள், தமிழ் சினிமாவில் அவரது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன. இதுபோன்ற சம்பவங்கள், சமூக ஊடகங்களில் பரவி, நடிகைகளின் பிம்பத்தை மாற்றி வருவதாகவும், இது சமூகத்தில் பரந்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பயில்வான் ரங்கநாதன் தனது பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post