அடங்காத கள்ளக் காதல் மோகம்.. இறுதியில் வெளிவந்த சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்..!

 


கடலூர் மாவட்டத்தின் அமைதியான வீராணம் ஏரி பகுதி, ஒரு காலத்தில் இயற்கையின் அழகை ரசிக்கும் இடமாக இருந்தது. ஆனால், இப்போது அந்த இடம் ஒரு பயங்கரமான கொலைக் கதையின் மையமாக மாறியிருக்கிறது.


சக்திவேல் என்ற நாற்பது வயது நிரம்பிய குடும்பஸ்தரின் அழுகிய சடலம் ஏரிக்கரையில் கண்டெடுக்கப்பட்டபோது, ஊரே அதிர்ச்சியில் உறைந்தது. முதலில், மது போதையில் தவறி ஏரியில் விழுந்து இறந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகித்தது. ஆனால், உடலில் காணப்பட்ட காயங்கள், இது வெறும் விபத்து இல்லை என்பதை உறுதி செய்தன.

இந்த மர்ம மரணத்தின் பின்னணியில் ஒரு கொடூரமான சதி இருப்பது புலனாய்வில் தெரியவந்தது. சக்திவேலும் அவரது மனைவி தீபாவும் பல ஆண்டுகளாக கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தவர்கள். இவர்களுக்கு அழகிய குழந்தைகளும் உண்டு.



ஆனால், குடும்ப வறுமையை சமாளிக்க, சக்திவேல் கோயம்புத்தூருக்கு ஓட்டுநராக வேலைக்குச் சென்றார். அங்கேயே தங்கி, மாதத்திற்கு ஒரு முறையோ இரு முறையோ வீட்டிற்கு வந்து செல்வார். இந்த இடைவெளியில், தீபாவின் வாழ்க்கையில் ஒரு புதிய நபர் நுழைந்தார். அவர் பெயர், சுகுமார்.


கந்து வட்டி கொடுப்பவர். தீபாவிடம் வட்டி வசூலிக்க வந்த சுகுமார், ஆரம்பத்தில் வெறும் பேச்சுவார்த்தையோடு தொடங்கிய உறவை, படிப்படியாக நட்பாகவும், பின்னர் நெருக்கமான உறவாகவும் மாற்றினார்.



சுகுமார் அடிக்கடி தீபாவின் வீட்டிற்கு வருவது வழக்கமானது. குழந்தைகளுக்கு இனிப்புகள், நொறுக்கு தீனிகள் வாங்கி வந்து கொடுத்து, தீபாவின் மனதை கவர்ந்தார்.


இந்த அக்கறையும், சுமாரின் சொகுசு வாழ்க்கையை அளிக்கும் வசதியும் தீபாவை சுகுமாருடன் மேலும் நெருக்கமாக்கியது. ஒரு கட்டத்தில், தீபாவை விளையாட்டாக சீண்ட ஆரம்பித்தான் சுகுமார். ஆனால், தீபா அதற்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. எதிர்ப்பு தெரிவித்தால் சொகுசு வாழ்க்கை போய் விடுமோ என நினைத்த தீபா சுகுமாரின் தொடுதல்களுக்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்க வில்லை.



நாளுக்காக நாள் சுகுமாரின் தொடுதல்கள் வரம்பு மீறுகின்றன. ஆனால், தீபாவோ அதை ரசிக்க தொடங்கினாள். ஆடையால் மறைக்கப்படாத பாகங்களை மட்டுமே சீண்டி வந்த சுகுமாரின் கைகள், ஒரு கட்டத்தில் உள்ளாடையால் மறைக்கப்பட்ட பகுதிகள் வரை நீண்டது. ஆனால், தீபா அதையும் ரசிக்க செய்தாள்.


இப்படி சீண்டல்களாலும், காதல் ரசம் சொட்டும் வார்த்தைகளாலும் கவரப்பட்ட தீபா சுகுமாருக்கு தன்னையே விருந்தாக்கினாள். வீட்டிலேயே சுகுமாருடன் உல்லாசமாக இருக்கத் தொடங்கினாள்.



இதற்கிடையில், குடும்பத்திற்காக உழைத்து, ஊருக்கு ஊர் அலைந்து கொண்டிருந்த சக்திவேல், தனது மனைவியின் மாறுபட்ட வாழ்க்கை முறையை கவனிக்கத் தொடங்கினார். “இவ்வளவு செல்வச் செழிப்பு எங்கிருந்து வந்தது?” என்ற சந்தேகம் அவரை உறுத்தியது.


தீபா, கணவனின் சந்தேகத்தை திசை திருப்ப, சுகுமாரை “உறவினர்” என்று அறிமுகப்படுத்தி, அவரது உதவியால் தான் இந்த வசதிகள் கிடைத்ததாகக் கூறினார். சுகுமாரும் சக்திவேலிடம் நட்பு பாவித்து, அவரை மது விருந்துகளுக்கு அழைத்து, நெருக்கமாகப் பழகினார். ஆனால், சக்திவேலுக்கு தெரியாது, இந்த நட்பு ஒரு மோசமான சதியின் முதல் படியாக இருந்தது.



நாட்கள் செல்லச் செல்ல, சக்திவேலுக்கு தனது மனைவியின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் வலுத்தது. நண்பர்கள் மூலம், சுகுமார் அடிக்கடி தனது வீட்டிற்கு வருவதை அறிந்தார். ஒரு நாள், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வீட்டிற்கு திரும்பிய சக்திவேல், தீபாவும் சுகுமாரும் நெருக்கமாக இருப்பதைப் பார்த்து அதிர்ந்தார்.


இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தீபா “இனி இப்படி நடக்காது” என்று உறுதி அளித்து, குழந்தைகளின் எதிர்காலத்தைக் காரணம் காட்டி சக்திவேலை சமாதானப்படுத்தினார். ஆனால், தீபாவின் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. சுகுமாரின் வசதிகளுக்காக அவருடன் தொடர்ந்து உல்லாசமாக இருந்தார்.



சக்திவேலின் சந்தேகம் தனது கள்ள உறவுக்கு தடையாக இருப்பதை உணர்ந்த தீபா, சுகுமாருடன் சேர்ந்து ஒரு கொடூர திட்டம் தீட்டினார். சக்திவேலை அகற்ற முடிவு செய்த இருவரும், சுகுமாரின் நண்பர்களைப் பயன்படுத்தி, சக்திவேலை மது விருந்துக்கு அழைத்தனர்.


அங்கு, அளவுக்கு அதிகமான மதுவை அவருக்கு அளித்து மயக்கமடையச் செய்தனர். பின்னர், அவரை கொடூரமாக அடித்து கொலை செய்து, வீராணம் ஏரியில் வீசினர். காவல்துறையின் கடுமையான விசாரணையில், தீபாவின் மகிழ்ச்சியான நடவடிக்கைகளும், சுகுமாருடனான தொடர்பும் வெளிச்சத்திற்கு வந்தன.


இந்த கொடூர சம்பவம், கடலூர் மாவட்டத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குடும்பத்திற்காக உழைத்த ஒரு கணவனை, அவனது மனைவியே துரோகம் செய்து கொலை செய்யத் தூண்டிய இந்த சம்பவம், அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கிறது.


காவல்துறை தீபாவையும் சுகுமாரையும் கைது செய்து, மேலதிக விசாரணையை தொடர்கிறது. இந்த சம்பவம், மனித உறவுகளில் நம்பிக்கையையும், குடும்ப பந்தத்தின் புனிதத்தையும் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post