சுவிசர்லாந்தில் நண்பரின் வீட்டு மூன்றாம் மாடியில் இருந்து தவறி வீழ்ந்த இளைஞர் பலி ! தனது நண்பர் ஒருவரின் வீட்டின் மூன்றாம் மாடியில் இருந்து தவறி வீழ்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது , சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியை பூர்வீகமாக கொண்ட இளைஞரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . சம்பவத்தில் குகராசசர்மா அரிஷ்சர்மா வயது22என்றஇளைஞரேஉயிரிழந்தவர்ஆவார் சம்பவம் தொடர்பாக சூரிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது இளைஞரின் இறுதிக்கிரியைகள் நாளை சூரிச் மாநிலத்தில் இடம் பெறவுள்ளது
