யாழில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகநபர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற நிலையில் கைது! யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள் குறித்து பொலிசாரால் நீண்ட காலமாக திருடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் காட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த நபர் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்துவந்த நிலையில் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு முயன்ற வேளையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
