கிளிநொச்சி மாவட்டத்தில் பெரிய பரந்தன் பகுதியில் அமைந்துள்ள ஆசிரியர் விடுதியில் இருந்து ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. திருவையாறு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் 47 வயதுடைய பேரம்பலம் பரந்தாமன் என்னும் ஆசிரியரே எரிகாயங்களுடன் சடலமாக இனம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
