பாபா வங்காவின் பல்வேறு கணிப்புகள் உண்மையான நிலையில் தற்போது 2026ஆம் ஆண்டு தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்த அவரது கணிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு (2025) உலகில் பல பகுதிகளில் நிலநடுக்கமும், வெள்ளமும் ஏற்பட்டு உலக அழிவு தொடங்கும் என்றும், பெரிய மோதல்கள், இனக்கலவரங்கள், சோகமான சம்பவங்கள் நடைபெறும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார். அவர் கணித்தது போன்றே பல்வேறு நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதுடன் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், உலக பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நிலையற்ற சூழ்நிலைகள் காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். உலக பொருளாதார நிலை, பணவீக்கம், வட்டி விகிதங்கள், அரசியல் பதற்றங்கள் என தங்கத்தின் விலை பல காரணங்களால் பாதிக்கப்படுகிறது. இந்த காரணிகள் கடந்த சில ஆண்டுகளில் தங்கத்தின் தேவை அதிகரிக்க காரணமாக இருந்துள்ளன. 2026இல் பெரும் மந்த நிலை அல்லது போர் போன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டால், தங்கத்தின் விலை உண்மையாகவே உயர வாய்ப்பு உள்ளது. பாபா வங்காவின் கணிப்புகள் பல முறை சரியாக இருந்தாலும், சிலர் அவற்றை யதார்த்தமாக எடுத்துக்கொள்கிறார்கள், மற்றவர்கள் சீரான சந்தை ஆய்வை முன்னிலைப்படுத்துகிறார்கள்.
